Home One Line P1 கொவிட்19 தடுப்பு மருந்து பரிசோதனை அடுத்த மாதம் தொடங்கும்

கொவிட்19 தடுப்பு மருந்து பரிசோதனை அடுத்த மாதம் தொடங்கும்

381
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சீனாவுடனான அரசாங்க அரசு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக மலேசியா தனது முதல் கொவிட் -19 தடுப்பு மருந்து பரிசோதனையை அடுத்த மாதம் மேற்கொள்ளும் என்று பிரதமர் மொகிதின் யாசின் தெரிவித்தார்.

இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் பயாலஜி சைனிஸ் அகாடமி ஆப் மெடிக்கல் சயின்சஸ் (ஐஎம்பிசிஏஎம்எஸ்) உருவாக்கிய தடுப்பு மருந்துக்கான மூன்றாம் கட்ட சோதனை இது என்று அவர் கூறினார்.

“இந்த மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையில் சுமார் 3,000 பங்கேற்பாளர்கள் ஈடுபடுவார்கள். மேலும், தடுப்பு மருந்துகள் வளர்ச்சியையும், செயல்திறனையும் மதிப்பீடு செய்வார்கள்,” என்று அவர் இன்று புத்ராஜெயாவில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இந்த சோதனை உள்ளூர் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தால் நடத்தப்படும் என்றும், இது ஏற்கனவே தேசிய மருத்துவ ஆராய்ச்சி பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

சுகாதார அமைச்சினால் நிர்வகிக்கப்படும் எட்டு மருத்துவ ஆராய்ச்சி தளங்களில் இந்த ஆய்வு நடைபெறும்.

எவ்வாறாயினும், ஆய்வு தொடங்குவதற்கு முன்பு, மருத்துவ பரிசோதனை இறக்குமதி உரிமத்தை அங்கீகரிப்பதற்கு முன்பு தடுப்பு மருந்துகளைப் பெற இருப்பவர்களின் பாதுகாப்பு சுயவிவரத்தை தேசிய மருந்து ஒழுங்குமுறை நிறுவனம் ஆய்வு செய்யும் என்று அவர் கூறினார்.