Home One Line P1 கொவிட்19: இருவர் மரணம்- 1,109 சம்பவங்கள் பதிவு

கொவிட்19: இருவர் மரணம்- 1,109 சம்பவங்கள் பதிவு

504
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று வெள்ளிக்கிழமை வரையில், கடந்த 24 மணி நேரத்தில்1,109 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் நாடு முழுவதிலும் பதிவாகியிருக்கின்றன.

உள்ளூரில் 1,099 தொற்று சம்பவங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், 10 சம்பவங்கள் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்கள் ஆவர்.

இதனைத் தொடர்ந்து மொத்தமாக நாட்டில் இதுவரையில் 61,861 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

#TamilSchoolmychoice

சிலாங்கூரில் 175 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. சபாவில் 441 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. கோலாலம்பூரில் 154 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நெகிரி செம்பிலானில் இன்று 167 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

இன்று அதிகமான 1,148 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வெளியேறி உள்ளனர். இதனைத் தொடர்ந்து, மொத்தமாக மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெற்று வெளியேறியவர்களின் எண்ணிக்கை 50,204-ஆக உயர்ந்துள்ளது.

இன்னமும், 11,307 பேர் தொற்றுக் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 113 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 41 பேருக்கு சுவாசக் கருவி உதவியோடு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இன்று இருவர் மரணமுற்ற நிலையில், மரண எண்ணிக்கை 350-ஆக உயர்ந்துள்ளது.