Home One Line P1 கொவிட்19: புதிய சம்பவங்கள் 1,335 – மரணங்கள் 2

கொவிட்19: புதிய சம்பவங்கள் 1,335 – மரணங்கள் 2

798
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று ஞாயிற்றுக்கிழமை வரையில், கடந்த 24 மணி நேரத்தில் 1,335 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் நாடு முழுவதிலும் பதிவாகியிருக்கின்றன.

உள்ளூரில் 1,332 தொற்று சம்பவங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், 3 சம்பவங்கள் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்கள் மூலம் பெறப்பட்டதாகும்.

இதனைத் தொடர்ந்து மொத்தமாக நாட்டில் இதுவரையில் 72,694 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

#TamilSchoolmychoice

இன்று 1,069 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வெளியேறி உள்ளனர். இதனைத் தொடர்ந்து, மொத்தமாக மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெற்று வெளியேறியவர்களின் எண்ணிக்கை 61,273 -ஆக உயர்ந்துள்ளது.

இன்னும், 11,039 பேர் தொற்றுக் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 126 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 57 பேருக்கு சுவாசக் கருவி உதவியோடு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மாநிலம் வாரியாக சிலாங்கூரில் 337 என்ற அளவில் மிக அதிகமான சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன.

அடுத்த நிலையில் மிக அதிகமான சம்பவங்கள் 258 என்ற அளவில் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் பதிவாகியிருக்கின்றன.

சபாவிலும் மிக அதிகமான அளவில் 250 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. அதற்கடுத்து கோலாலம்பூரில் 178 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் கொவிட் தொற்று தொடர்பில் 2 மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இதைத் தொடர்ந்து மரண எண்ணிக்கை 382-ஆக உயர்ந்துள்ளது.

மாநிலம் வாரியாக கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை