Home One Line P2 பாண்டியன் ஸ்டோர்ஸ் ‘சித்ரா’ தற்கொலை- இரசிகர்கள் அதிர்ச்சி

பாண்டியன் ஸ்டோர்ஸ் ‘சித்ரா’ தற்கொலை- இரசிகர்கள் அதிர்ச்சி

863
0
SHARE
Ad

சென்னை: விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொலைக்காட்சி நாடகத்தில் ‘முல்லை’ என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா, 28, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

சித்ரா கஷ்டப்பட்டு சின்னத்திரையில் முக்கிய நடிகையாக வளர்ந்திருக்கிறார் என்ற கருத்துகள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்படுகிறது.

சென்னை நசரத்பேட்டையில் உள்ள தங்கும் விடுதியில் அவர், இன்று புதன்கிழமை அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இச்செய்தி அவரது இரசிகர்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

#TamilSchoolmychoice

அவரின் இந்த முடிவிற்கான காரணத்தை காவல் துறையினர் தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள். சில மாதங்களுக்கு முன், சித்ராவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஹேமந்த் ரவி என்ற தொழிலதிபரை அவர் திருமண செய்ய இருந்தார்.