Home One Line P1 பேராக் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் தேமு சந்திப்பு

பேராக் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் தேமு சந்திப்பு

369
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பேராக்கில் நடந்து வரும் அரசியல் நெருக்கடியைத் தொடர்ந்து நேற்று செவ்வாய்க்கிழமை இரவு தேசிய முன்னணி சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. இது குறித்த புகைப்படங்களை மஇகா தலைவர் எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தமது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

அதில் தேசிய முன்னணி கூறு கட்சிகளான அம்னோ, மஇகா மற்றும் மசீச முக்கியமாகப் பங்குக்கொண்டன. கூட்டத்திற்குப் பிறகு பேசிய வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹுசேன், கட்சியின் முடிவுக்கு தாங்கள் கட்டுப்படுவதாகக் கூறினார்.