Home One Line P1 கொவிட்-19: மூவர் மரணம்- 1,220 புதிய சம்பவங்கள் பதிவு

கொவிட்-19: மூவர் மரணம்- 1,220 புதிய சம்பவங்கள் பதிவு

322
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று வியாழக்கிழமை வரையில், கடந்த 24 மணி நேரத்தில் 1,220 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் நாடு முழுவதிலும் பதிவாகியிருக்கின்றன.

உள்ளூரில் 1,214 தொற்று சம்பவங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், 6 சம்பவங்கள் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர் மூலம் பெறப்பட்டதாகும்.

இதனைத் தொடர்ந்து மொத்தமாக நாட்டில் இதுவரையில் 89,133 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

#TamilSchoolmychoice

இன்று 1,297 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வெளியேறி உள்ளனர். இதனைத் தொடர்ந்து, மொத்தமாக மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெற்று வெளியேறியவர்களின் எண்ணிக்கை 74,030-ஆக உயர்ந்துள்ளது.

இன்னும், 14,671 பேர் தொற்றுக் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 106 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 53 பேருக்கு சுவாசக் கருவி உதவியோடு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மாநிலம் வாரியாக சிலாங்கூரில் அதிகமாக 368 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. கோலாலம்பூரில் 297 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. சபாவில் 184 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. மலாக்காவில் 98 சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன.

இன்று மேலும் 3 பேர் மரணமுற்ற நிலையில் மரண எண்ணிக்கை 432-ஆக உயர்ந்துள்ளது.