Home One Line P2 மாஸ்டர் வெளியீட்டிற்கு, திரையரங்குகளில் 100 விழுக்காடு பார்வையாளர்களை அனுமதிக்க விஜய் கோரிக்கை

மாஸ்டர் வெளியீட்டிற்கு, திரையரங்குகளில் 100 விழுக்காடு பார்வையாளர்களை அனுமதிக்க விஜய் கோரிக்கை

531
0
SHARE
Ad

சென்னை: மாஸ்டர் திரைப்பட வருகிற பொங்கல் பண்டிகைக்கு வெளிவர இருக்கும் நிலையில், நடிகர் விஜய் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று திங்கட்கிழமை சந்தித்து பேசியுள்ளார்.

திரையரங்குகளில் 100 விழுக்காடு பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். வருகிற ஜனவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் இப்படத்தினை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

#TamilSchoolmychoice

கொவிட்-19 தொற்று காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் கடந்த மாதம் தான் திறக்கப்பட்டன. ஆனால், 50 விழுக்காடு இருக்கைகள் மட்டுமே நிரப்பப்பட வேண்டும் என்பது அரசின் விதிமுறை.