Home One Line P1 கொவிட்-19: புதிதாக 2,593 சம்பவங்கள் பதிவு- 4 பேர் மரணம்

கொவிட்-19: புதிதாக 2,593 சம்பவங்கள் பதிவு- 4 பேர் மரணம்

396
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை (ஜனவரி 6) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 2,593 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் நாடு முழுவதிலும் பதிவாகியிருக்கின்றன.

இதில் உள்ளூரில் 2,589 தொற்று சம்பவங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், 4 சம்பவங்கள் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்கள் மூலம் பெறப்பட்டதாகும்.

இதனைத் தொடர்ந்து மொத்தமாக நாட்டில் இதுவரையில் 125,438 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

#TamilSchoolmychoice

இன்று வரையிலான ஒருநாளில் 1,129 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறி உள்ளனர். இதனைத் தொடர்ந்து, மொத்தமாக மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெற்று வெளியேறியவர்களின் எண்ணிக்கை 100,578–ஆக உயர்ந்துள்ளது.

இன்னும், 24,347 பேர் தொற்றுக் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 141 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 67 பேருக்கு சுவாசக் கருவி உதவியோடு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இன்று வரையிலான ஒருநாளில் 4 பேர் மரணமுற்ற நிலையில், மரண எண்ணிக்கை 513-ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி அதிகப்படியாக சிலாங்கூரில் 965 சம்பவங்களும், அதற்கு அடுத்த நிலையில் ஜோகூரில் 571 சம்பவங்களும் பதிவாகி உள்ளன. சபாவில் 405 சம்பவங்கள் பதிவாகி உள்ள நிலையில், கோலாலம்பூரில் 265 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.