Home No FB செல்லியல் காணொலி : “பேய்ச்சி” நாவல் தடை – ம.நவீன் விளக்கம் என்ன? (பகுதி 1)

செல்லியல் காணொலி : “பேய்ச்சி” நாவல் தடை – ம.நவீன் விளக்கம் என்ன? (பகுதி 1)

710
0
SHARE
Ad

Selliyal video | “Peichi” Tamil Novel ban – Author M.Navin explains (Part 1) | 06 January 2021
செல்லியல் காணொலி |“பேய்ச்சி” நாவல் தடை –  ம.நவீன் விளக்கம் என்ன? (பகுதி 1) | 06 ஜனவரி 2021

கோலாலம்பூர் : மலேசியாவின் குறிப்பிடத்தக்க இலக்கியப் படைப்பாளர்களில் ஒருவர், “வல்லினம்” இலக்கிய ஊடகத்தளத்தின் தோற்றுநரான ம.நவீன்.

அண்மையில் அவர் எழுதி வெளியிட்ட “பேய்ச்சி” என்ற நாவல் சில சர்ச்சை அலைகளை ஏற்படுத்தியது. சில நாட்களுக்கு முன்னர் மலேசிய அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டது இந்த நாவல்.

#TamilSchoolmychoice

எழுத்துச் சுதந்திரத்திற்கு எதிரான முடிவு என ஒரு சாராரும், நாவலில் இடம் பெற்றுள்ள உள்ளடக்கத்தின் அடிப்படையில் இத்தகைய தடை நியாயமே என ஒரு சாராரும் வாதிட சமூக ஊடகங்களில் விவாதங்கள் தொடர்கின்றன.

இந்நிலையில் படைப்பாளர் ம.நவீனையே நேரில் கண்டு அவரது கருத்துகளை செல்லியல் கேட்டறிந்தது. அவர் வழங்கியிருக்கும் அவரது தரப்பு விளக்கங்கள் செல்லியல் காணொலித் தளத்தில் இரண்டு பகுதிகள் கொண்ட காணொலிகளாக இடம் பெறுகின்றன.

மேற்கண்ட இணைப்பில் முதல் பகுதி காணொலியைக் காணலாம்.