Home One Line P1 கொவிட்-19: அதிகமாக 3,309 சம்பவங்கள் பதிவு- நால்வர் மரணம்

கொவிட்-19: அதிகமாக 3,309 சம்பவங்கள் பதிவு- நால்வர் மரணம்

418
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை (ஜனவரி 12) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 3,309 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் நாடு முழுவதிலும் பதிவாகியிருக்கின்றன. இதுவரையிலும் பதிவான சம்பவங்களில் இதுவே அதிகம்.

இதில் உள்ளூரில் 3,303 தொற்று சம்பவங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், 6 சம்பவங்கள் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்கள் மூலம் பெறப்பட்டதாகும்.

இதனைத் தொடர்ந்து மொத்தமாக நாட்டில் இதுவரையில் 141,533 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

#TamilSchoolmychoice

இன்று வரையிலான ஒருநாளில் 1,469 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறி உள்ளனர். இதனைத் தொடர்ந்து, மொத்தமாக மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெற்று வெளியேறியவர்களின் எண்ணிக்கை 110,584–ஆக உயர்ந்துள்ளது.

இன்னும், 30,390 பேர் தொற்றுக் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 190 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 83 பேருக்கு சுவாசக் கருவி உதவியோடு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இன்று ஒரேநாளில் 4 பேர் மரணமுற்ற நிலையில், மரண எண்ணிக்கை 559-ஆக உயர்ந்துள்ளது.

மாநிலங்கள் அளவில் அதிகபடியாக சிலாங்கூரில் 1,007 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. அடுத்து ஜோகூரில் 442 சம்பவங்கள் பதிவான நிலையில், சபாவில் 409 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கோலாலம்பூர் மற்றும்பேராக்கில் முறையே 326 மற்றும் 241 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

சரவாக்கில் அதிக அளவில் 146 தொற்றுகள் பதிவாகியுள்ளன.