Home One Line P1 கொவிட்-19: புதிதாக 3,048 சம்பவங்கள் பதிவு- 11 பேர் மரணம்

கொவிட்-19: புதிதாக 3,048 சம்பவங்கள் பதிவு- 11 பேர் மரணம்

367
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று திங்கட்கிழமை (ஜனவரி 25) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகமான அளவில் 3,048 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் நாடு முழுவதிலும் பதிவாகியிருக்கின்றன.

உள்ளூரில் 3,040 தொற்று சம்பவங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், 8 சம்பவங்கள் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்கள் மூலம் பெறப்பட்டதாகும்.

இதனைத் தொடர்ந்து மொத்தமாக நாட்டில் இதுவரையில் 186,849 சம்பவங்கள் இதுவரையில் பதிவாகி உள்ளன.

#TamilSchoolmychoice

இன்று வரையிலான கடந்த ஒருநாளில் 3,638 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறி உள்ளனர். இதனைத் தொடர்ந்து, மொத்தமாக மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெற்று வெளியேறியவர்களின் எண்ணிக்கை 145,084–ஆக உயர்ந்துள்ளது.

இன்னும், 41,076 பேர் தொற்றுக் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 261 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 101 பேருக்கு சுவாசக் கருவி உதவியோடு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இன்று ஒரே நாளில் 11 பேர் மரணமுற்ற நிலையில், மரண எண்ணிக்கை 689-ஆக உயர்ந்துள்ளது.

மாநிலங்களைப் பொறுத்தவரையில் சிலாங்கூர் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. 1,035 சம்பவங்கள் சிலாங்கூரில் மட்டும் பதிவாகியுள்ளன. அடுத்த நிலையில் ஜோகூர் 529 தொற்றுகளைப் பதிவு செய்தது.

சபா 348 சம்பவங்களைப் பதிவு செய்த நிலையில் கோலாலம்பூர் 305 தொற்றுகளைப் பதிவு செய்திருக்கிறது.

இதனிடையே, இது குறித்து முன்னதாகப் பேசிய சுகாதார இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, புதிய சம்பவங்கள் 11 நாட்களில் மிகக் குறைந்த நிலையை எட்டியுள்ள நிலையில், அடுத்த இரண்டு வாரங்களில் புதிய சம்பவங்களின் எண்ணிக்கை குறையலாம் என்று கூறியுள்ளார்.

நோய்த்தொற்று விகிதம் முந்தைய 1.2 உயர் மட்டத்திலிருந்து 1.06-க்கு குறைந்துள்ளதாக அவர் கூறினார்.

“எனவே நம் எதிர்பார்ப்புகளின்படி, இன்று 3,000 சம்பவங்கள் 3,048 வழக்குகளைக் கண்டன. நேற்றையதை விடக் குறைவு. 14 நாட்களுக்குள், தினசரி சம்பவங்கள் சீரான நிலையை அடையலாம் என்று நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.