Home One Line P1 கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர் தற்கொலைக்கு முயற்சி

கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர் தற்கொலைக்கு முயற்சி

393
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டதாக நம்பப்படும் 57 வயது நபர் சனிக்கிழமை பண்டார் பாரு செந்துலில் ஓர் அடுக்குமாடி குடியிருப்பின் 11 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இருப்பினும், அந்த நபர் தலை, வயிறு பகுதிகளில் உடல் காயங்களுடன் உயிர் தப்பினார். அவருக்கு கை, கால்களில் முறிவு ஏற்பட்டது.

மாலை 4.30 மணியளவில் இந்த சம்பவம் குறித்து காவல் துறைக்கு பொதுமக்களால் தெரிவிக்கப்பட்டதாக செந்துல் காவல்துறைத் தலைவர் பெ எங் லாய் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

அவருக்கு கொவிட் -19 இருப்பதாக, அந்த நபரின் அருகில் இருந்த ஒரு குறிப்பை காவல் துறையினர் கண்டுபிடித்தனர்.

பாதிக்கப்பட்ட நபர் இப்போது கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சுயநினைவற்று உள்ளார் என்று பெ இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தற்கொலைக்கு முயன்றதற்காக இந்த வழக்கு தண்டனைச் சட்டம் பிரிவு 309-இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது.