Home One Line P1 பெஜுவாங், அமானா கட்சியின் சின்னத்தைப் பயன்படுத்தலாம்

பெஜுவாங், அமானா கட்சியின் சின்னத்தைப் பயன்படுத்தலாம்

432
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பெஜுவாங் கட்சி அமானா சின்னத்தைப் பயன்படுத்தி அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது.

மலேசியாகினியைத் தொடர்பு கொண்டபோது அதன் துணைத் தலைவர் மார்சுகி யஹ்யா இந்த விஷயத்தை உறுதிப்படுத்தினார்.

அமானா தலைவர்களும் இந்த யோசனையை உறுதிப்படுத்தினர், ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ விவாதங்கள் எதுவும் இதுவரை நடக்கவில்லை என்று கூறினர்.

#TamilSchoolmychoice

முன்னாள் வெளியுறவு அமைச்சரான மார்சுகி, இது பல ஆரம்ப யோசனைகளில் ஒன்றாகும் என்று கூறினார்.

“நாங்கள் இதுவரை எதையும் விவாதிக்கவில்லை (அமானாவுடன்). இது சில பரிந்துரைகளில் ஒன்றாகும். இப்போது எங்கள் கவனம் பெஜுவாங்கை பதிவு செய்வதாகும்,” என்று அவர் கூறினார்.

வாரிசானுடன் இணைவதையும் கட்சி பரிசீலிக்கிறதா என்று கேட்கப்பட்டபோது, ​​செனட்டர் சுருக்கமாக அவர்கள் எதிர்க்கட்சியில் உள்ள அனைவருடனும் பணியாற்றத் தயாராக உள்ளதாகக் கூறினார்.

“இருப்பினும், நாங்கள் இதுவரை எதையும் செய்யவில்லை. பெஜுவாங் கட்சியைப் பதிவு செய்வதில் நாங்கள் அதிக கவனம் செலுத்துகிறோம்,” என்று அவர் கூறினார்.

பெஜுவாங் கட்சி கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் பெர்சாத்திவிலிருந்து வெளியான தலைவர்களால் உருவாக்கப்பட்டது.