Home One Line P1 கொவிட்-19: நேற்றைய எண்ணிக்கையை விட அதிகமாக 5,728 சம்பவங்கள் பதிவு- 13 பேர் மரணம்

கொவிட்-19: நேற்றைய எண்ணிக்கையை விட அதிகமாக 5,728 சம்பவங்கள் பதிவு- 13 பேர் மரணம்

595
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று சனிக்கிழமை (ஜனவரி 30) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் இது வரையிலும் இல்லாத அளவில் அதிகமாக 5,728 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் நாடு முழுவதிலும் பதிவாகியிருக்கின்றன. இது நேற்றைய எண்ணிக்கையான 5,725 என்பதைவிட 3 தொற்றுகள் அதிகமாகும்.

இதைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக 5 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுகள் பதிவாகி இதுவரையிலான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 209,661 ஆக அதிகரித்துள்ளன.

தொற்றுகளில் இருந்து குணமாகி இல்லம் திரும்பியவர்களின் எண்ணிக்கை 161,527 ஆக அதிகரித்துள்ளன.

#TamilSchoolmychoice

இன்றைய நிலையில் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 47,388 ஆகும்.

சிகிச்சை பெற்று வருபவர்களில் 319 பேர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை வழங்கப்படுகிறது. அவர்களில் 120 பேர்களுக்கு சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.

இன்றைய ஒரு நாளில் 13 மரணங்களைத் தொடர்ந்து இதுவரையிலான மரண எண்ணிக்கை 746 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலங்கள் அளவில் மிக அதிகமான சம்பவங்கள் சிலாங்கூரில் பதிவாகி உள்ளன. 3,285 சம்பவங்கள் சிலாங்கூரில் மட்டும் பதிவாகி உள்ளன. இதை அடுத்து 792 சம்பவங்கள் ஜோகூரிலும், கோலாலம்பூரில் 480 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.