Home One Line P1 டோமி தோமஸ் கற்பனையாக புத்தகம் வெளியிட்டுள்ளார்

டோமி தோமஸ் கற்பனையாக புத்தகம் வெளியிட்டுள்ளார்

471
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் முன்னாள் சட்டத்துறைத் தலைவர் டோமி தோமஸின் புத்தகம் குறித்த சில கூற்றுக்கள் குறித்து அதிர்ச்சியையும் மனச்சோர்வையும் வெளிப்படுத்தியுள்ளார்.

ஒரு நீண்ட அறிக்கையில், மகாதீர் பிரதமர் பதவியிலிருந்து விலகுவது  குறித்த தோமஸின் கூற்று கற்பனையாக உள்ளது என்றும்,  தோமஸுக்கு அவர் எழுதிய சில விஷயங்களைப் பற்றியே தெரியாது என்றும்  மகாதீர் கூறினார்.

உதாரணமாக, மாமன்னர் அப்போதைய துணைப் பிரதமர்  டாக்டர் வான் அசிசா இஸ்மாயிலை இடைக்கால பிரதமராக நியமிக்க விரும்புவதாக தோமஸிடம் கூறியதாகக் குறிப்பிட்டதை மறுத்தார்.

#TamilSchoolmychoice

“இதில் உண்மையில்லை”, என்றார் மகாதீர்.