Home One Line P2 ஆஸ்ட்ரோவில் உள்ளூர் தமிழ் நகைச்சுவைத் தொடர் ‘அப்பளசாமி அபார்ட்மென்ட்’ முதல் ஒளிபரப்பு காண்கிறது

ஆஸ்ட்ரோவில் உள்ளூர் தமிழ் நகைச்சுவைத் தொடர் ‘அப்பளசாமி அபார்ட்மென்ட்’ முதல் ஒளிபரப்பு காண்கிறது

568
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் 2021 பிப்ரவரி 22-ஆம் தேதி தொடங்கி முதல் ஒளிபரப்புக் காணும் உள்ளூர் தமிழ் நகைச்சுவைத் தொடரான ‘அப்பளசாமி அபார்ட்மென்ட்’ தொடரை, ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை 201), ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் வழியாகக் கண்டு மகிழலாம்.

‘Fobia Malam Pertama, 2014’ திரைப்படத்தை இயக்கியப் புகழ்பெற்ற உள்ளூர் திரைப்பட இயக்குநர், முரளி அப்துல்லா இயக்கிய அப்பளசாமி அபார்ட்மென்ட் எனும் 26 அத்தியாயங்களைக் கொண்டப் பெருங்களிப்பு தொடரில், எஸ். கானா, ரமேஷ், டத்தோ ஷாஷாஸ்ரீ, தோக்கோ சத்தியா, குபேன், சுரேஹா குட்டி, சந்தினி கோர், தீபாஸ்ரீ நாயர், மற்றும் சுபாஸ்ரீ உள்ளிட்டப் பிரபலமான உள்ளூர் கலைஞர்கள் நடித்துள்ளனர். இயக்குநர் முரளி அப்துல்லா இயக்கிய முதல் தமிழ் தொடர், அப்பளசாமி அபார்ட்மென்ட்.

தொண்டு செய்யும் குணம் கொண்ட அப்பளசாமிக்குச் சொந்தமான ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் (அபார்ட்மென்ட்) வசிக்கும் ஒரு சமூகத்தைச் சித்தரிக்கின்றது, இத்தொடர். முன்னாள் தோட்டத் தொழிலாளியான அவர், மக்களை முன்னிருத்துவதோடு அதில் நம்பிக்கையும் கொண்டவர். அவ்வடுக்குமாடி குடியிருப்பு அவரது மகன் அரவிந்த்சாமிக்கும் சொந்தமானது மற்றும் டைமன் பாபுவால் நிர்வகிக்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

ஒரு நாள், உள்ளூர் அதிகாரிகள், அப்பளசாமி அபார்ட்மென்டிற்கு எதிரான முறைகேடு மற்றும் புகார்களினால் குற்ற எச்சரிக்கை அறிக்கை (summons) அனுப்புகின்றனர். அதிருப்தி அடைந்த அரவிந்த்சாமி, டைமன் பாபுவை பணியிலிருந்து நீக்கிவிட்டு, அதிகாரிகளின் அடுத்த நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்காக 6 மாதங்களுக்குள் பிரச்சினைகளைத் தீர்க்க புதிய மேலாளரான ரூபாவதியை நியமிக்கிறார். அப்பளசாமி அபார்ட்மென்டில் உள்ள சிக்கல்கள் எவ்வாறுத் தீர்க்கப்படுகின்றன என்பதைக் கண்டறிய தொடரைக் காண்க.

ஒவ்வொரு திங்கள் முதல் வியாழன் வரை, இரவு 8 மணிக்கு ஆஸ்ட்ரோ வானவில் எச்டியில் (அலைவரிசை 201) அப்பளசாமி அபார்ட்மென்ட் தொடரின் புதிய அத்தியாயங்களைக் கண்டு மகிழுங்கள் அல்லது ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் வாயிலாக எப்போது வேண்டுமானாலும் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.