Home One Line P1 கொவிட்-19: 12 பேர் மரணம்- 3,545 சம்பவங்கள் பதிவு

கொவிட்-19: 12 பேர் மரணம்- 3,545 சம்பவங்கள் பதிவு

326
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை (பிப்ரவரி 24) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 3,545 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இதில் 3,544 தொற்றுகள் உள்நாட்டில் பதிவானவை. ஒரு தொற்று வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களால் பதிவானவை.

இதைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 291,774 ஆக அதிகரித்துள்ளன.

#TamilSchoolmychoice

கடந்த ஒரு நாளில் மட்டும் 3,331 பேர் குணமடைந்து இல்லம் திரும்பியிருக்கின்றனர். தொற்றுகளில் இருந்து குணமாகி இல்லம் திரும்பியவர்களின் எண்ணிக்கை 260,009 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய நிலையில் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 30,677 ஆகும்.

சிகிச்சை பெற்று வருபவர்களில் 189 பேர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை வழங்கப்படுகிறது. அவர்களில் 88 பேருக்கு சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.

இன்றைய ஒரு நாளில் 12 மரணங்கள் பதிவானதைத் தொடர்ந்து இதுவரையிலான மரண எண்ணிக்கை 1,088- ஆக உயர்ந்துள்ளது.

மாநிலங்கள் அளவில் மிக அதிகமான சம்பவங்கள் நெகிரி செம்பிலானில் பதிவாகி உள்ளன. சுமார் 1,392 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. சிலாங்கூரில் 581 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. கோலாலம்பூரில் 381 சம்பவங்களும், ஜோகூரில் 318 சம்பவங்களும் பதிவாகி உள்ளன. சரவாக்கில் 353 சம்பவங்கள் பதிவாகின.