Home One Line P1 கொவிட்-19: ஐவர் மரணம்- 1,116 சம்பவங்கள் பதிவு

கொவிட்-19: ஐவர் மரணம்- 1,116 சம்பவங்கள் பதிவு

358
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று திங்கட்கிழமை (மார்ச் 22) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 1,116 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இதில் 1,108 பேர் உள்நாட்டினர். மேலும் 8 பேர் வெளிநாட்டினர் ஆவர். இந்தத் தொற்றுகள் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களால் பதிவானவை. இதைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 334,156 ஆக அதிகரித்துள்ளன.

கடந்த ஒரு நாளில் மட்டும் 1,495 பேர் குணமடைந்து இல்லம் திரும்பியிருக்கின்றனர். தொற்றுகளில் இருந்து குணமாகி இல்லம் திரும்பியவர்களின் எண்ணிக்கை இதுவரையில் 318,784 ஆக அதிகரித்துள்ளது.

#TamilSchoolmychoice

இன்றைய நிலையில் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 14,134 ஆகும்.

சிகிச்சை பெற்று வருபவர்களில் 156 பேர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை வழங்கப்படுகிறது. அவர்களில் 60 பேருக்கு சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.

இன்றைய ஒரு நாளில் 5 மரணங்கள் பதிவானதைத் தொடர்ந்து இதுவரையிலான மரண எண்ணிக்கை 1,228- ஆக உயர்ந்துள்ளது.

மாநிலங்கள் அளவில் மிக அதிகமான சம்பவங்கள் 403 என்ற எண்ணிக்கையில் சிலாங்கூரில் பதிவாகி உள்ளன.