Home One Line P1 கொவிட்-19: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு தீவிர சிகிச்சை!

கொவிட்-19: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு தீவிர சிகிச்சை!

593
0
SHARE
Ad


சென்னை: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சகாயம் கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகிய நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சில தினங்களுக்கு முன்பு சகாயம் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டார். அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடலில் இரத்த அழுத்தம் குறைந்து கொண்டே வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில், தமிழக சட்டமன்றத் தேர்தலில் அரசியல் பேரவை என்ற அமைப்பை தொடங்கி, 20 தொகுதிகளில் அவ்வமைப்பு போட்டியிட்டது. ஆனால், சகாயம் தேர்தலில் போட்டியிடவில்லை. வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

#TamilSchoolmychoice

இந்தியாவில், ஒவ்வொரு நாளும் கொவிட்-19 தொற்று அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் கடந்த சில வாரங்களாக பாதிப்பு மிக வேகமாக அதிகரித்துள்ளது. தேர்தல் பிரச்சரங்களில் ஈடுபட்ட அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.