Home நாடு அரசு ஊழியர்களுக்கு 500 ரிங்கிட் ஊக்கத் தொகை

அரசு ஊழியர்களுக்கு 500 ரிங்கிட் ஊக்கத் தொகை

689
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிரதமர் துறை அலுவலகம் இன்று 2 மில்லியன் அரசு ஊழியர்களுக்கு 500 ரிங்கிட் சிறப்பு நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.

இந்த ஊக்கத் தொகை அடுத்த மாதம் கொண்டாடப்படும் நோன்பு கொண்டாட்டத்திற்கான தயார் நிலைக்கானது என்று அது ஓர் அறிக்கையில் கூறியது.

“இந்த சவாலான காலகட்டத்தில் நாடு செல்லும் போது, இந்த மானியம் மக்களுக்கு சேவைகளை வழங்குவதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதில் அரசு ஊழியர்களின் சேவைகள் மற்றும் தியாகங்களை பாராட்டுவதாகும். இந்த சிறப்பு உதவிக்கான கட்டணம் மே 6- ஆம் தேதி வழங்கப்படும். மே மாதத்திற்கான சம்பளத்துடன் இது சேர்ந்து வழங்கப்படும், ” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.