Home இந்தியா கொவிட்-19: சென்னையில் படுக்கை தட்டுப்பாடு ஏற்படும் நிலை

கொவிட்-19: சென்னையில் படுக்கை தட்டுப்பாடு ஏற்படும் நிலை

375
0
SHARE
Ad

சென்னை: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை புதிதாக 15,830 பேருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் மாநிலத்தில் 1.26 இலட்சம் பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டமான சென்னையில் செவ்வாய்க்கிழமை மட்டும் புதிதாக 4,640 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 27 பேர் இறப்புகளும் பதிவாகியுள்ளன.

தற்போது இங்கு, படுக்கை தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளதால், சென்னை மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அனைத்து படுக்கை வசதிகளையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கு ஏற்றவாறு மாற்றப்பட்டு வருகிறது.