Home நாடு எஸ்ஆர்சி: மேல்முறையீட்டு நீதிமன்ற விசாரணை முடிவுற்றது- தீர்ப்பு ஒத்திவைப்பு

எஸ்ஆர்சி: மேல்முறையீட்டு நீதிமன்ற விசாரணை முடிவுற்றது- தீர்ப்பு ஒத்திவைப்பு

449
0
SHARE
Ad

புத்ராஜெயா: எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் நிதியில் 42 மில்லியனை முறைகேடாகப் பயன்படுத்தியதற்காக முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீதான தண்டனை மற்றும் சிறைத் தண்டனையை எதிர்த்து மேல்முறையீட்டு நீதிமன்றம் விசாரணையை முடித்தது.

இருப்பினும், மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பை நிர்ணயிக்காத தேதிக்கு ஒத்திவைத்தது.

நீதிபதி அப்துல் கரீம் அப்துல் ஜலீல் தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழு இரு தரப்பினரிடமிருந்தும் 15 நாட்கள் வாதங்களைக் கேட்டது.

#TamilSchoolmychoice

“சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் நாங்கள் நன்றி கூறுகிறோம். மற்ற மேல்முறையீட்டு விசாரணைகளுடன் ஒப்பிடும்போது இந்த விசாரணை விதிவிலக்காக நீண்டது,” என்று அவர் கூறினார்.

“இரு தரப்பினரும் பல முக்கியமான பிரச்சனைகளை எழுப்பியதால், எங்கள் முடிவை வழங்க எங்களுக்கு சிறிது நேரம் தேவை.”

கடந்த ஆண்டு ஜூலை 28-ஆம் தேதி கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து நஜிப் மேல்முறையீடு செய்துள்ளார். எஸ்ஆர்சி நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதால், அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 210 மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.