Home இந்தியா கொவிட்-19: தமிழகத்தில் ஊரடங்கு மே 31 வரை தொடர்கிறது

கொவிட்-19: தமிழகத்தில் ஊரடங்கு மே 31 வரை தொடர்கிறது

513
0
SHARE
Ad

சென்னை: தமிழகத்தில் இன்று (மே 24) முதல் மே 31-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான கண்காணிப்புகளை மேற்கொள்ள அமைச்சர்களை நியமிக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொவிட்-19 தொற்று பரவல் அதிகரித்து வருவருகிறது. ஏற்கெனவே, மே 10-ஆம் தேதி முதல் மே 24-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால், காய்கறி கடைகள், இறைச்சிக் கடைகள், மளிகை கடைகளில் மக்கள் கூட்டம் இருந்ததால் தொற்று குறையாமல் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் மே 23 வரையிலும் 35,483 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுளது.