Home உலகம் ஈரோ 2020 : இன்றைய ஆட்டங்கள் – இங்கிலாந்து களமிறங்குகிறது

ஈரோ 2020 : இன்றைய ஆட்டங்கள் – இங்கிலாந்து களமிறங்குகிறது

438
0
SHARE
Ad

ரோம் : ஐரோப்பியக் கிண்ணத்திற்கான ஈரோ 2020 காற்பந்து போட்டிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 13) மூன்று ஆட்டங்கள் நடைபெறவிருக்கின்றன. உலகம் எங்கும் காற்பந்து இரசிகர்களைக் கொண்டிருக்கும் இங்கிலாந்து இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் குரோஷியாவுடன் மோதுகிறது. (குறிப்பிடப்பட்டிருக்கும் நேரங்கள் மலேசிய நேரங்களாகும்).

இங்கிலாந்து-குரோஷியா மோதும் ஆட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 13) இரவு 9.00 மணிக்கு இலண்டன் வெம்ப்ளி அரங்கில் நடைபெறுகிறது.

பிரிட்டன் ஒரே நாடாக அரசியல் காரணங்களுக்காக இயங்கி வந்தாலும், காற்பந்து என்று வந்து விட்டால் தனித் தனியாகச்செயல்படும்.  அதற்கேற்ப ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் இங்கிலாந்து ஒரு குழுவாகவும், வேல்ஸ் ஒரு குழுவாகவும், ஸ்காட்லாந்து ஒரு குழுவாகவும் இந்தப் போட்டிகளில் குதித்துள்ளன.

ஆஸ்திரியா – நோர்த் மாசிடோனியா மோதுகின்றன

#TamilSchoolmychoice

இன்று நள்ளிரவு 12.00 மணிக்கு நடைபெறும் இரண்டாவது ஆட்டத்தில் ஆஸ்திரியாவும், நோர்த் மாசிடோனியாவும் மோதுகின்றன.

ரோமானியாவின் புச்சாரெஸ்ட் நகரில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது.

நெதர்லாந்து – உக்ரேன் இடையிலான ஆட்டம்

திங்கட்கிழமை (ஜூன் 14) அதிகாலை 3.00 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் நெதர்லாந்து, உக்ரேன் ஆகிய இருநாடுகளும் களம் காண்கின்றன.

நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது.

எல்லா ஆட்டங்களும் ஆஸ்ட்ரோவில் நேரலையாக ஒளிபரப்பாகின்றன.