இதைத் தொடர்ந்து இதுவரையில் நாட்டில் மொத்தம் பதிவான தொற்றுகளின் எண்ணிக்கை 657,508 ஆக உயர்ந்துள்ளது.
மொத்தம் பதிவான 5,374 தொற்று சம்பவங்களில் 5,299 தொற்றுகள் உள்நாட்டிலேயே பரவியதாகும். 5 தொற்றுகள் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களால் பரவியதாகும்.
கடந்த ஒரு நாளில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 73,324 எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவர்களில் 917 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 452 பேருக்கு சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.
கடந்த ஒரு நாளில் மரண எண்ணிக்கை 64-ஐ தொட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த மரண எண்ணிக்கை 3,908-ஆக உயர்ந்திருக்கிறது.
கோலாலம்பூரில் 462 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. நெகிரி செம்பிலானில் 331 தொற்றுகள் பதிவாயின.
நேற்று நள்ளிரவு வரையில் ஒருநாளில் 133,804 பேர்கள் இரண்டு அளவை கொண்ட தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்றுள்ளனர்.