Home நாடு கொவிட்-19: மரணங்கள் 64 – புதிய சம்பவங்கள் 5,304

கொவிட்-19: மரணங்கள் 64 – புதிய சம்பவங்கள் 5,304

702
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 13 ) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மலேசியாவில் மொத்தம் 5,374 கொவிட்-19 தொற்றுகள் பதிவாயின.

இதைத் தொடர்ந்து இதுவரையில் நாட்டில் மொத்தம் பதிவான தொற்றுகளின் எண்ணிக்கை 657,508 ஆக உயர்ந்துள்ளது.

மொத்தம் பதிவான 5,374 தொற்று சம்பவங்களில் 5,299 தொற்றுகள் உள்நாட்டிலேயே பரவியதாகும். 5 தொற்றுகள் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களால் பரவியதாகும்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் கொவிட் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 8,163 -ஆக பதிவாகி உள்ளது. இதைத் தொடர்ந்து இதுவரையில் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 580,276-ஆக உயர்ந்திருக்கிறது.

கடந்த ஒரு நாளில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 73,324 எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவர்களில் 917 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 452 பேருக்கு சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.

கடந்த ஒரு நாளில் மரண எண்ணிக்கை 64-ஐ தொட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த மரண எண்ணிக்கை 3,908-ஆக உயர்ந்திருக்கிறது.

மிக அதிகமான தொற்றுகளை சிலாங்கூர் மீண்டும் பதிவு செய்தது. 1,973 தொற்றுகளை சிலாங்கூர் பதிவு செய்தது. அதனை அடுத்து சரவாக் 544 தொற்றுகளைப் பதிவு செய்தது.

கோலாலம்பூரில் 462 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. நெகிரி செம்பிலானில் 331 தொற்றுகள் பதிவாயின.

இதற்கிடையில் நேற்று சனிக்கிழமை ஜூன் 12 வரையில் 4,361,358 பேர்களுக்கு இரண்டு அளவை கொண்ட தடுப்பூசிகள் முழுமையாகப் போடப்பட்டுள்ளன.
நேற்று நள்ளிரவு வரையில் ஒருநாளில் 133,804 பேர்கள் இரண்டு அளவை கொண்ட தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்றுள்ளனர்.