Home நாடு கொவிட்-19: புதிதாக 6,440 சம்பவங்கள் பதிவு- 74 பேர் மரணம்

கொவிட்-19: புதிதாக 6,440 சம்பவங்கள் பதிவு- 74 பேர் மரணம்

387
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கடந்த 24 மணி நேரத்தில் 6,440 கொவிட் -19 சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில், மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை இப்போது 685,204 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவித்தார்.

மொத்தம் பதிவான 6,440 தொற்று சம்பவங்களில் 6,435 தொற்றுகள் உள்நாட்டிலேயே பரவியதாகும். 5 தொற்றுகள் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களால் பரவியதாகும்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் கொவிட் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 6,861 -ஆக பயிவாகி உள்ளது. இதைத் தொடர்ந்து இதுவரையில் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 615,326-ஆக உயர்ந்திருக்கிறது.

கடந்த ஒரு நாளில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 65,602 எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவர்களில் 894 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 451 பேருக்கு சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.

கடந்த ஒரு நாளில் மரண எண்ணிக்கை 74-ஐ தொட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த மரண எண்ணிக்கை 4,276-ஆக உயர்ந்திருக்கிறது.

சிலாங்கூரில் அதிகமாக 2,095 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.