Home உலகம் பிலிப்பைன்ஸ் இராணுவ விமான விபத்து : 40 பேர் காயங்களுடன் மீட்பு; 17 பேர் மரணம்

பிலிப்பைன்ஸ் இராணுவ விமான விபத்து : 40 பேர் காயங்களுடன் மீட்பு; 17 பேர் மரணம்

741
0
SHARE
Ad

மணிலா : (பிற்பகல் 3.30 மணி வரையிலான நிலவரம்) பிலிப்பைன்ஸ் இராணுவ விமானம் ஒன்று 92 இராணுவத் துருப்புகளுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை விழுந்து நொறுங்கியது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் தென்பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்தது. இதுவரையில் 40 இராணுவ வீரர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மாண்டவர்களின் எண்ணிக்கை இதுவரையில் 17 பேர் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் சூலு பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்தது. இந்தப் பகுதியில் அபு சாயாப் உள்ளிட்ட பல்வேறு இஸ்லாமியத் தீவிரவாதக் கும்பல்களுடன் ஆயுதப் போரில் பிலிப்பைன்ஸ் இராணுவம் ஈடுபட்டு வருகிறது.

#TamilSchoolmychoice

தரையிறங்கும்போது, விமான ஓடுபாதையை அடையாளம் காண முடியாத காரணத்தால் விபத்து ஏற்பட்டதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார். ஜோலோ விமான நிலையத்திலிருந்து சில கிலோமீட்டர்கள் தூரத்தில் இந்த விபத்து ஏற்பட்டது.

தாக்குதல் ஏதும் நடத்தப்பட்டதற்கான அறிகுறிகள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.