Home நாடு மலேசியக் கடற்படையின் 2 ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து – 10 பேர் மரணம்!

மலேசியக் கடற்படையின் 2 ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து – 10 பேர் மரணம்!

128
0
SHARE
Ad

லுமுட் : பேராக் மாநிலத்தில் லுமுட் நகரிலுள்ள மலேசியக் கடற்படைத் தளத்தில் இரண்டு ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதிக் கொண்டதில் அந்த ஹெலிகாப்டர்களில் இருந்த 10 பேரும் மரணமடைந்தனர். இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.32 மணிவாக்கில் பயிற்சியின்போது இந்த விபத்து நடைபெற்றது.

ஒரு ஹெலிகாப்டரில் 3 பேரும் மற்றொரு ஹெலிகாப்டரில் 7 பேரும் அந்தப் பயிற்சியின்போது இருந்தனர்.

இந்த விபத்து குறித்து விரிவான விசாரணைகள் நடத்தப்படும் என மலேசியக் கடற்படை அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது. விபத்து குறித்த காணொலிகளை பொதுமக்கள் பகிர வேண்டாம் என்றும் மலேசியக் கடற்படை அந்த அறிக்கையில் குறிப்பிட்டது.

#TamilSchoolmychoice

அருகிலிருந்த மற்றொரு பேராக் மாநில நகரான சித்தியவானில் உள்ள ஒரு திடலில் இருந்து காலை 9.03 மணிக்கு அந்த இரு ஹெலிகாப்டர்களும் புறப்பட்டன.