Home நாடு கொவிட்-19; கொவிட் தொற்று மரணங்கள் 207 – மரணமடைந்த பின்னர் மருத்துவமனைகளுக்குக் கொண்டு வரப்பட்டவர்கள் 31

கொவிட்-19; கொவிட் தொற்று மரணங்கள் 207 – மரணமடைந்த பின்னர் மருத்துவமனைகளுக்குக் கொண்டு வரப்பட்டவர்கள் 31

2423
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 27) ஒரு நாள் வரையிலான மொத்த கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிக அளவில் 16,117 ஆகப் பதிவாகியது.

சிலாங்கூரில் மட்டும் 6,616 தொற்றுகள் பதிவாயின. கோலாலம்பூரில் 2,457 தொற்றுகள் பதிவாகி இருக்கின்றன. கடந்த சில நாட்களில் தொற்றுகள் அதிகரித்து வரும் கெடாவில் ஒருநாள் தொற்றுகளின் எண்ணிக்கை 1000 ஆக பதிவாகியது.

இன்றைய ஒருநாள் மரண எண்ணிக்கை 207 ஆக உயர்ந்தது. நேற்று ஒருநாள் மரண எண்ணிக்கையும் இதே அளவில் 207 ஆக இருந்தது என்பது ஆச்சரியமான ஒற்றுமையாகும்.

#TamilSchoolmychoice

மரணமடைந்தவர்களில் 176 பேர் மருத்துவமனைகளில் மரணமடைந்திருக்கிறார்கள். 31 பேர் மரணமடைந்த நிலையில் மருத்துவமனைகளுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள்.

170,224 பேர் மருத்துவமனைகளில் நாடு முழுமையிலும் கொவிட் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

கொவிட் தொடர்பான தொற்றுகளின் ஒருநாள் புள்ளி விவரங்களைக் கீழ்க்காணும்  வரைபடத்தில் காணலாம்.