பிரதமராக நியமிக்கப்படுபவர் யாராக இருந்தாலும் நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென மாமன்னர் அறிக்கை ஒன்றின் வழி ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் இதன் தொடர்பில் அறிக்கை வெளியிட்டிருக்கும் சட்டத் துறை தலைவர் இட்ருஸ் ஹாருண், பிரதமர் தனது பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் நிரூபிக்க வேண்டியதில்லை என்றும் அவ்வாறு செய்வது மாமன்னரின் அதிகாரத்தை மீறுவதற்கு ஒப்பாகும் எனத் தெரிவித்திருந்தார்.
நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் மன்றம் சார்பில் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், அமானா தலைவர் முகமட் சாபு, ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் ஆகிய மூவரும் கூட்டாக அந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.
Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal
மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal