Home நாடு சீன, தமிழ்ப் பள்ளிகளை ஏன் மூட வேண்டும்? – நீதிமன்ற வழக்கில் மலாய் அமைப்புகளின் வழக்கறிஞரின்...

சீன, தமிழ்ப் பள்ளிகளை ஏன் மூட வேண்டும்? – நீதிமன்ற வழக்கில் மலாய் அமைப்புகளின் வழக்கறிஞரின் வாதம்

836
0
SHARE
Ad
ஹானிப் காத்ரி அப்துல்லா

கோலாலம்பூர் : சீன, தமிழ்ப் பள்ளிகளில் கற்பிக்கப்படும் மைய மொழியாக சீனம், தமிழ் மொழி அகற்றப்பட்டு மலாய் மொழியே பயன்படுத்தப்பட வேண்டும் என சில மலாய் அமைப்புகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளன.

அந்த வழக்கின் விசாரணை நேற்று தொடங்கியது. தீபகற்ப மலாய் மாணவர் சங்கம் (Gabungan Pelajar Melayu Semenanjung -GPMS), மலேசிய இஸ்லாமியக் கல்வி வளர்ச்சி மன்றம் (Majlis Pembangunan Pendidikan Islam Malaysia – Mappim), தேசிய எழுத்தாளர் சங்கங்களின் கூட்டமைப்பு (Coalition of National Writers’ Associations – Gapena) ஆகிய 3 இயக்கங்களும் இணைந்து இந்த வழக்கைத் தொடுத்துள்ளன.

நேற்று செவ்வாய்க்கிழமை (நவம்பர் 23) நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி முன்னிலையில் தொடங்கிய இந்த வழக்கில் மேற்குறிப்பிட்ட இயக்கங்களைப் பிரதிநிதித்து வழக்காடிய வழக்கறிஞர் ஹானிப் காத்ரி தனது வாதங்களைச் சமர்ப்பித்தார்.

#TamilSchoolmychoice

தற்போதுள்ள நிலைமை சீன, தமிழ்ப் பள்ளிகளில் தொடர்ந்தால், அவற்றில் பயிலும் மாணவர்கள் மலாய் மொழியில் போதிய தேர்ச்சி பெற்றிருக்கமாட்டார்கள் – எனவே அவர்களுக்கான வேலைவாய்ப்புகளும் போதிய அளவில் கிடைக்காது என ஹானிப் காத்ரி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதனால், மலேசிய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள கௌரவமான பல உரிமைகளை சீன, தமிழ்ப்பள்ளிகளின் மாணவர்கள் இழக்க நேரிடும், அவர்களுக்கு அரசாங்க சேவைகளில் வேலை வாய்ப்புகளும் கிடைக்காது எனவும் ஹானிப் காத்ரி மேலும் குறிப்பிட்டார்.

தன் வாதத்தை வலியுறுத்தும் சில ஆவணங்களையும் ஹானிப் காத்ரி நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.