Home நாடு மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு தமிழக அரசின் “தமிழ்த்தாய்” விருது – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு தமிழக அரசின் “தமிழ்த்தாய்” விருது – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

1028
0
SHARE
Ad

  • தமிழக அரசின் உயரிய அங்கீகாரம் தமிழ்த்தாய் விருது மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு வழங்கப்படுகிறது! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு தமிழ் நாடு அரசின் மிக உரிய விருதான ‘தமிழ்த்தாய்’ விருது வழங்கப்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன் தலைவர் பெ.இராஜேந்திரன் அவர்களின் தொடர் முன்னெடுப்புகளின் வழி உலகளாவிய நிலையில் சங்கம் சிறந்த அமைப்பாக அடையாளம் காணப்பட்டுள்ளது. தன்னுடைய இடைவிடாத பணிகளின் மூலம் சங்கத்திற்கு திரு.பெ.இராஜேந்திரன் ஈட்டித் தந்திருக்கும் மிகப்பெரிய கிரீடமாக இந்த தமிழ்த் தாய் விருது விளங்குகிறது.

#TamilSchoolmychoice

நேற்று சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு விருதாளர்கள் பட்டியலை அறிவித்தார். அவற்றில் சிறந்த தமிழ் அமைப்புக்கான விருதும் அடங்கும்.

பெ.இராஜேந்திரன்

‘தமிழ்த் தாய்’ விருது என அழைக்கப்படும் இவ்விருதை இவ்வாண்டு மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் பெறுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

ஐந்து இலட்சம் ரூபாயுடன், கேடயம், தகுதியுரை, சான்றிதழ் ஆகியவையும் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார்.

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு தமிழக அரசு வழங்கும் இரண்டாவது விருதாக அமைகிறது. 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உலகின் சிறந்த இலக்கியச் சேவையாளருக்கான விருதை இலட்சம் ரூபாயுடன் அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.