Home நாடு சோஸ்மா சட்டத்தைத் தற்காத்த உள்துறை அமைச்சர் சைபுடின் நசுத்தியோன் – சாடிய முன்னாள் பெர்சே தலைவர்

சோஸ்மா சட்டத்தைத் தற்காத்த உள்துறை அமைச்சர் சைபுடின் நசுத்தியோன் – சாடிய முன்னாள் பெர்சே தலைவர்

362
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : கடந்த சில ஆண்டுகளாக ஜனநாயகப் போராட்டவாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்திருக்கும் சட்டம் சோஸ்மா என்னும் Security Offences (Special Measures) Act (Sosma) – பாதுகாப்புக் குற்றங்களுக்கான சட்டமாகும்.

குறிப்பாக இந்தியர்களுக்கு எதிராக இந்தச் சட்டம் பயன்படுத்தப்படுகிறது என அடிக்கடி குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

இந்நிலையில் உள்துறை அமைச்சர் சைபுடின் நசுத்தியோன் சோஸ்மா சட்டம் திருத்தப்படாது – மாறாக நிலைநிறுத்தப்படும் எனக் கூறியுள்ளார். அவரின் அந்த கூற்றுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

#TamilSchoolmychoice

பெர்சா இயக்கத்தின் முன்னாள் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மரியா சின் அப்துல்லா சைபுடின் அப்துல்லாவைக் கடுமையாகச் சாடியுள்ளார்.

சோஸ்மா சட்ட நடைமுறைகள் அநீதிக்கு வழிவகுக்கின்றன என்றும் காவல் துறையினர் போன்ற அரசு சார்பு அமைப்புகள் இந்த சோஸ்மா போன்ற அநீதிகளை வளர்க்கின்றன என்றும் மரியா சின் கூறினார்.

சோஸ்மா நடைமுறைகள் காரணமாக சிலர் நீதிமன்ற விசாரணைகள் முடிந்தும் தொடர்ந்து இந்த சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர் – சிலர் 7 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைவாசம் அனுபவித்திருக்கின்றனர்.