அந்த வழக்கில் ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பானது. அதனால் தன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் அவர் இழந்தார்.
குஜராத் நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்யப்பட்டதில் அந்த மேல்முறையீட்டை இன்று நீதிமன்றம் தள்ளுபடி செய்து தண்டனையை உறுதி செய்தது. இனி ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
2024-இல் இந்தியப் பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. அதற்குள் அவருக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்காவிட்டால் அவர் மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் போட்டியிட முடியாது. இதனால் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவும் ஏற்படலாம். அல்லது ராகுல் மீதான அனுதாபத்தால் கூடுதல் வாக்குகளும் கிடைக்கலாம். கூடுதல் தொகுதிகளை காங்கிரஸ் வெல்லலாம் என்றும் கணிக்கப்படுகிறது.