Home நாடு பெலாங்காய் சட்டமன்ற இடைத் தேர்தல் : மும்முனைப் போட்டி

பெலாங்காய் சட்டமன்ற இடைத் தேர்தல் : மும்முனைப் போட்டி

420
0
SHARE
Ad

பெந்தோங்: எதிர்வரும் அக்டோபர் 7-ஆம் தேதி நடைபெறவிருக்கும் பெலாங்காய் சட்டமன்றத் தேர்தல் மும்முனைப் போட்டியாக உருவெடுத்துள்ளது.

இன்று சனிக்கிழமை (செப்டம்பர் 23) நடைபெற்ற வேட்புமனுத் தாக்கலின் போது பெந்தோங் அம்னோ தொகுதியின் செயலவை உறுப்பினரான டத்தோ அமிசார் அபு அடாம் தேசிய முன்னணி வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தார்.

அவரை எதிர்த்து பாஸ் கட்சியைச் சேர்ந்த காசிம் சாமாட் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளராகப் போட்டியிடுக்கிறார். இவர் பெந்தோங் பாஸ் தொகுதியின் துணைத் தலைவருமாவார்.

#TamilSchoolmychoice

ஹாஸ்லி ஹெல்மி டிஎம் சுல்ஹாஸ்லி சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.

வாக்களிப்பு அக்டோபர் 7-ஆம் தேதி நடைபெறும். முன்கூட்டிய வாக்களிப்பு அக்டோபர் 3-ஆம் தேதி நடைபெறும்.

எல்மினா விமான விபத்தில் கொல்லப்பட்ட பெலாங்காய் சட்டமன்ற உறுப்பினர் ஜோஹாரி ஹாருண்

கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி எல்மினா, ஷா ஆலாம் என்ற இடத்தில் நிகழ்ந்த சிறுரக விமான விபத்தில் கொல்லப்பட்டவர்களில் பகாங் மாநில ஆட்சிக் குழு உறுப்பினரும் பெலாங்காய் சட்டமன்ற உறுப்பினருமான ஜோஹாரி ஹாருணும் ஒருவராவார்.

பெந்தோங் அம்னோ தொகுதி தலைவருமாக ஜோஹாரி செயலாற்றி வந்தார்.

அவரின் அகால மரணத்தைத் தொடர்ந்து பெலாங்காய் சட்டமன்றத்திற்கான இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

பெலாங்காய் சட்டமன்றத் தொகுதியில் கடந்த 15-வது பொதுத் தேர்தலில் ஜோஹாரி 4,048 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

அவரை எதிர்த்து பெரிக்காத்தான் நேஷனல், பக்காத்தான் ஹாரப்பான் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

பெந்தோங் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ்வரும் 4 சட்டமன்றத் தொகுதிகளில் பெலாங்காய் ஒன்றாகும்.

2018 கணக்கெடுப்பின்படி இந்த சட்டமன்றத் தொகுதியில் 71 விழுக்காட்டு மலாய் வாக்காளர்களும், 20 விழுக்காட்டு சீன, 6 விழுக்காட்டு இந்திய வாக்காளர்களும் இருக்கின்றனர்.

மற்ற வாக்காளர்கள் 3 விழுக்காட்டினராக இருக்கின்றனர்.

எல்மினா விமான விபத்து

சுபாங் விமான நிலையத்தில் இறங்குவதற்கு இரண்டே நிமிடங்கள் இருக்கும் வேளையில் பீச்கிராப்ட் மாடல் 390 என்னும் சிறிய ரக விமானம் நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கியது.

அதிலிருந்த பகாங் ஆட்சிக் குழு உறுப்பினர் ஜோஹாரி உள்ளிட்ட 8 பேர் கொல்லப்பட்டனர். விமானம் சாலையில் விழுந்ததில் வாகனங்களோடு மோதியதில் மேலும் இருவர் உயிரிழந்தனர்.