Home நாடு பாடு : 11.55 மில்லியன் பேர் – 52.6% விழுக்காட்டினர் பதிவு!

பாடு : 11.55 மில்லியன் பேர் – 52.6% விழுக்காட்டினர் பதிவு!

157
0
SHARE
Ad
பாடு தரவுத் தள சின்னத்துடன் ரபிசி ரம்லி

புத்ரா ஜெயா : கடந்த மார்ச் 31-உடன் நிறைவடைந்த பாடு முதன்மைத் தரவுத் தளத்தில் இதுவரையில் 18 வயத்துக்கும் மேற்பட்ட 11.55 மில்லியன் பேர் பதிந்து கொண்டுள்ளனர். இது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 52.6 விழுக்காடாகும்.

18-வயதுக்கும் கீழ்ப்பட்டவர்களின் விவரங்களையும் சேர்த்தால் மக்கள் தொகையில் 58.7 விழுக்காட்டினர் இதுவரை வெற்றிகரமாகப் பதிந்து கொண்டுள்ளனர், என பொருளாதார அமைச்சர் ரபிசி ரம்லி தன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

பதிவு செய்து கொண்ட அனைவருக்கும் ரபிசி தன் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார். இந்தத் திட்டத்தில் ஒத்துழைத்த புள்ளிவிவர இலாகா, தேசிய இலக்கவியல் இலாகா, தொடர்புத் துறை அமைச்சு உள்ளிட்ட மற்ற அரசாங்க அமைப்புகளுக்கும் ரபிசி நன்றி தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இதைத் தொடர்ந்து இனி அரசாங்க நிதி உதவிகள் முறைமைப்படுத்தப்படும் எனவும் ரபிசி குறிப்பிட்டார்.