
கோலாலம்பூர்: மே 23-ஆம் தேதி நடைபெற்ற பிகேஆர் கட்சித் தேர்தலில் நூருல் இசாவிடம் தோல்வியடைந்த ரபிசி ரம்லிக்கு நியமனப் பதவியாக இரண்டாவது துணைத் தலைவர் பதவியை வழங்க தன்னிடம் கேட்கப்பட்டதாகவும் ஆனால் அந்த நியமனப் பதவியை ஏற்கத் தான் மறுத்து விட்டதாகவும் ரபிசி ரம்லி தெரிவித்துள்ளார்.
அதே சமயத்தில் புதிய கட்சி தொடங்கும் ஆலோசனையையும் அவர் தவிர்ப்பதாகக் கூறியிருக்கிறார்.
பிகேஆர் கட்சியில் எந்த நியமனப் பதவியையும் தான் ஏற்கப் போவதில்லை என்றும் உறுதிபட அறிவித்துள்ளார்.
நூருல் இசா தன்னைச் சந்தித்தபோது, இரண்டாவது துணைத் தலைவராகத் தன்னை நியமிக்கும் பரிந்துரையைச் செய்தார் என்றும் எனினும் தான் அதனை மறுத்துவிட்டதாகவும் ரபிசி ரம்லி கூறினார்.
அடுத்த கட்டமாக, ரபிசி ரம்லி என்ன முடிவெடுப்பார் என்ற ஊகங்களும், ஆரூடங்களும் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.
துணைத் தலைவருக்கான போட்டியில் நூருல் இசாவிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ரபிசி ரம்லி பொருளாதார அமைச்சர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
அவரைத் தொடர்ந்து பிகேஆர் உதவித் தலைவர் தேர்தலில் தோல்வியடைந்த நிக் நாஸ்மியும் தனது அமைச்சுப் பொறுப்பைத் துறந்துள்ளார்.