Home இந்தியா செந்தில் பாலாஜி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

செந்தில் பாலாஜி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

223
0
SHARE
Ad

சென்னை: ஊழல் மோசடி குற்றச்சாட்டுகளுக்காக அமலாக்கத்துறையால் கைதாகி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு ஐசியூ என்னும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜுன் 14ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு செந்தில் பாலாஜி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

கைதாகி இருந்த காலகட்டத்தில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து, அவருக்கு இருதய ரத்தநாள அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

#TamilSchoolmychoice

தொடர்ந்து ஜாமீன் பெற அவர் நீதிமன்றப் போராட்டம் நடத்தி வருகிறார். எனினும் இதுவரையில் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.