Home உலகம் ஈரானின் கடுங்காவல் தண்டனைக் கைதிகளின் சிறைச்சாலையைத் தாக்கிய இஸ்ரேல்!

ஈரானின் கடுங்காவல் தண்டனைக் கைதிகளின் சிறைச்சாலையைத் தாக்கிய இஸ்ரேல்!

48
0
SHARE
Ad
இஸ்ரேலில் ஈரான் தாக்குதலால் பாதிக்கப்பட்டப் பகுதிகளைப் பார்வையிடும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

டெஹ்ரான்: ஈரானின் 3 முக்கிய அணு உலைகள் மீது அமெரிக்கா பல மணிநேரத் தாக்குதல் நடத்தி அவற்றை முற்றாக அழித்து விட்டதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து அறிக்கை வெளியிட்ட ஈரானின் ஆட்சியாளர் அயோத்துல்லா காமெனி, “அமெரிக்கா எங்கள் அணு ஆயுத வளங்களை அழித்து விட்டதாக மாயை கொண்டுள்ளது – ஆனால் அது உண்மையல்ல! இத்தகைய தாக்குதல்கள் நடக்கும் என்பதை முன்கூட்டியே அறிந்து, மார்ச் மாதத்திலேயே எங்களின் அணு உலைகளின் வளங்களை நாங்கள் இடம் மாற்றி விட்டோம்” எனக் கூறியிருந்தார்.

தொடர்ந்து அமெரிக்காவுக்குத் தக்க பாடம் புகட்டுவோம் என்றும் அயோத்துல்லா காமெனி கூறியிருந்தார்.

இதற்கிடையில் ஈரானில் கடுங்காவல் தண்டனைக் கைதிகள் சிறைவைக்கப்பட்டிருக்கும் சிறைச்சாலையை இஸ்ரேல் தாக்கியுள்ளது. இதன் மூலம் இந்தக் கைதிகளை விடுதலை செய்து அவர்களால் கலவரம் ஏற்படுத்துவது இஸ்ரேலின் நோக்கமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

#TamilSchoolmychoice

டெஹ்ரானின் மையப்பகுதியில் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் அறிவித்திருக்கிறது.

ஈரானும் பதிலடியாக இஸ்ரேலின் சில பகுதிகளை நோக்கி ஏவுகணைகளைப் பாய்ச்சியது. எனினும் அவற்றின் பெரும்பகுதியைத் தாங்கள் தடுத்து அழித்து விட்டதாக இஸ்ரேல் கூறியது.

இதற்கிடையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சமூக ஊடகங்களில் பதிவிட்ட டொனால்ட் டிரம்ப் ஈரானில் ஆட்சி மாற்றம் நிகழலாம் எனக் கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்கு அயோத்துல்லா அலி காமெனி இன்னும் பதிலளிக்கவில்லை. ஈரானின் அரசியல் அதிகார மையங்கள் சீர்குலைந்திருக்கும் நிலையில் அங்கு ஆட்சி மாற்றம் நிகழுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.