Home 13வது பொதுத் தேர்தல் நெகிரி செம்பிலான் சிக்காமட்டில் 25,000 பேர் அன்வார் உரைக்கு திரண்டனர்!

நெகிரி செம்பிலான் சிக்காமட்டில் 25,000 பேர் அன்வார் உரைக்கு திரண்டனர்!

588
0
SHARE
Ad

Anwar Ibrahimமே 1 – கடந்த முறை நான்கே தொகுதிகளில் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத்தைக் கைப்பற்றும் வாய்ப்பைத் தவறவிட்ட மக்கள் கூட்டணி இந்த முறை மீண்டும் அந்த மாநிலத்தை கைப்பற்றி விட வேண்டும் என்ற நோக்கில் நேற்று சிரம்பான் நகரை நோக்கி தனது பிரச்சாரத்தை  எதிர்க் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் முடுக்கி விட்டார்.

நெகிரி செம்பிலான் வட்டாரத்தில் பல கூட்டங்களில் கலந்து கொண்ட அன்வார், சிரம்பான் நகருக்கு அருகிலுள்ள சிக்காமட் என்ற பகுதியில் நேற்றிரவு உரையாற்றியபோது சுமார் 25,000 பேர் அவரது உரையைக் கேட்கத் திரண்டனர்.

இதன் மூலம் நெகிரி செம்பிலானில் போட்டியிடும் மக்கள் கூட்டணி வேட்பாளர்கள் உற்சாகமடைந்துள்ளதோடு, நெகிரி செம்பிலான் மாநிலத்தை இந்த பொதுத் தேர்தலில் மக்கள் கூட்டணி கைப்பற்றி விடும் என்ற நம்பிக்கையும் பிறந்துள்ளது.

#TamilSchoolmychoice

 

 

Comments