மேலும், “நடந்து முடிந்த 13 ஆவது பொதுத்தேர்தலில் இனவாதம் தலைதூக்கி காணப்பட்டது. சுதந்திரம் அடைந்து 57 ஆண்டுகள் ஆகியும் இன்னும் மலேசிய மக்கள் வெவ்வேறு இனங்களாகவே பிரிந்து கிடக்கிறார்கள். இதற்கு தமிழ், சீனப் பள்ளிகள் தான் முக்கிய காரணமாக விளங்குகின்றன. இதனால் தொடக்கத்திலேயே அனைத்து இன மாணவர்களும் ஒன்றாக சேர்ந்து படிப்பதற்கான வாய்ப்பு இல்லாமல் இருக்கிறது” என்று அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
அதோடு, ஒரே மொழியை போதிக்கும் தேசிய பள்ளிகள் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், இந்நாட்டின் ஒற்றுமைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களாகத் தான் கருதுவதாகவும் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.