ஜூன் 23- இயக்குனர் விஜய் இயக்கிய தெய்வத்திருமகள் படத்தில் நடித்த அமலாபால், தற்போது அவர் இயக்கியுள்ள தலைவா படத்திலும் மீண்டும் நாயகியாக நடித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில், தமிழ் திரையுலகில் கதாநாயகியாகும் ஒவ்வொரு நடிகைக்குமே நடிகர் விஜேயுடன் நடிக்க வேண்டும் என்பது கனவாக இருக்கும்.
இந்த சந்தர்ப்பத்தில் எனக்கு விஜய்யுடன் ஆடி பாடுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுத்த இயக்குனர் விஜய்க்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
அவர் நினைத்திருந்தால் வேறு எந்த நடிகையை வேண்டுமானாலும் நடிக்க வைத்திருக்கலாம். ஆனால், அவரது தெய்வத்திருமகள் படத்தில் நடித்தேன் என்ற ஒரே காரணத்திற்காக இந்த படத்தில் என்னை நடிக்க வைத்தார்.
ஆக, எனது திரையுலகில் மிக முக்கியமான இயக்குனரான அவர், இனிமேல் இயக்கும் படங்களில் நடிக்க என்னை எப்போது அழைத்தாலும் வந்து நடித்துக்கொடுப்பதற்கு தயாராக இருக்கிறேன் என்றார் அமலாபால்.