உலன் பாடூர், ஜூன் 26- மத்திய ஆசிய நாடான மங்கோலியாவின் தற்போதைய அதிபர் டசகியா எல்பெக்டோரிஜ்.
கடந்த 2009-ம் ஆண்டு அதிபரான இவரின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இதை அடுத்து இன்று மங்கோலியாவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது.
மங்கோலியாவில் இன்று அதிகாலை அதிபர் தேர்தல் தொடங்கியது. இந்த தேர்தலில் 50 சதவீதம் வாக்குகளைப் பெறுபவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். வேட்பாளர்கள் எவரும் 50 சதவீத வாக்குகள் பெறவில்லை என்றால், ஜூலை 10-ம் தேதி மறுதேர்தல் நடத்தப்படும்.
சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு முடிவுகள் தற்போதைய அதிபருக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கின்றன.