சென்னை, ஜுன் 27- முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியதில் உயிரிழந்த ஹெலிகாப்டர் விமானி பிரவீண் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த விபத்தில் உயிரிழந்த பிரவீண் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.