Home வாழ் நலம் இதயத்தை காக்கும் சீத்தா பழம்

இதயத்தை காக்கும் சீத்தா பழம்

939
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூலை 10- சீத்தாபழம் நோய் எதிர்ப்பு சக்தியான வைட்டமின்சியை கொண்டிருக்கிறது. இது உடலில் ஏற்படும் நோய்களை அழித்து உடலை ஆரோக்கியத்துடன் பாதுகாத்துக்கொள்ளும் ஆற்றலை கொண்டது.

இதில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் கொண்டுள்ளதால் நமது இதயத்தை இதய நோயிலிருந்து பாதுகாக்கிறது. அதுமட்டுமல்லாமல் நமது உடலில் உள்ள இரத்த அழுத்தத்தை கட்டுபடுத்துகிறது.

tumblr_ljlrz9k8vP1qhtnsco1_500முடியை ஆரோக்கியமாக வைத்திருக்க நினைப்பவர்கள் சீத்தாபழம் சாப்பிட்டு வந்தால் முடியை பாதுகாக்கலாம் ஏனெனில் முடியை பாதுகாக்கும் வைட்டமின் ஏ வை கொண்டிருக்கிறது. சீத்தாபழம் கண் பார்வைக்கும் செரிமாண பிரச்சனைக்கும் சிறந்தது. சீத்தாபழ மரத்தின் பட்டை குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ஏற்படும் வயிற்றுபோக்கை நிறுத்துவதற்கும் மரத்தின் இலைகள் நீரிழிவுக்கு சிகிச்சை அளிப்பதற்கும் பயன்படுகின்றது.

#TamilSchoolmychoice

சீத்தாபழம் எவற்றையெல்லாம் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டுள்ளது என பார்க்கலாம். கர்ப்பகாலத்தில் உள்ளவர்கள் சீத்தாபழம் சாப்பிடலாம். மேலும் கண்பார்வைக்கு, செரிமான பிரச்சனைக்கு, ஆரோக்கியமான இதயத்திற்கு, கீல்வாதம், ரெய்மடிஸ்ம் சிகிச்சைக்கு, சோர்வுடன் போராடும், இரத்தசோகைக்கு, புற்றுநோய் மற்றும் கட்டிகளுக்கு உதவிபுரிகிறது.

custard_apple_18lkqoq-18lkqovபல வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துகளை கொண்டுள்ள சீத்தாபழம் பக்கவாதம், மாரடைப்பு, புற்றுநோய்க்கு மருத்துவத்தில் உதவுகிறது. உங்களுக்கு மாறிகொண்டே இருக்கும் இரத்தஅழுத்தம் இருந்தால் தினமும் இப்பழத்தை சாப்பிடுவதன் மூலம் இரத்தஅழுத்தத்தை கட்டுபாட்டில் வைத்துக்கொள்ளலாம். நோய்க்கு மருந்தாவதோடு மட்டுமல்லாமல் அழகுக்கும் உதவுகிறது. இதை தொடர்ந்து சாப்பிட்டால் முகம் மற்றம் தோல் பளபளப்பாக மாறும்.

இதில் மெக்னீசியத்தின் அளவை அதிகம் கொண்டிருப்பதால் உடலில் நீர் இருப்பு நிலையை பராமரிக்கிறது. இது மூட்டுகளில் இருந்து பல்வேறு அமிலங்களை அகற்றி மூட்டுகளில் ஏற்படும் வாதநோய், கீழ்வாதநோய், மூட்டுவலி, ஆகியவற்றை குறைக்கிறது.

இரத்தசோகை உள்ளவர்கள் சீத்தாபழத்தை சாப்பிட்டால் விரைவான தீர்வு பெறலாம். எடைகுறைவாக உள்ளவர்கள் எடையை அதிகப்படுத்த இப்பழத்தை தினமும் சாப்பிடலாம். சீத்தாபழத்தின் தோல் பற்சிதைவு, ஈறுகளில் ஏற்படும் வலிகளுக்கு உதவியாக உள்ளது. எனவே, சீத்தாபழத்தை சாப்பிட்டு நலமாக வாழ்வோமாக!