நடிகைகள் பற்றி டுவிட்டரில் ஒருவர் அவதூறு செய்தி வெளியிட்டு இருந்தார். பணத்துக்காக நடிகைகள் தவறாக நடப்பதாக அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதற்கு டுவிட்டரில் நடிகை குஷ்பு கண்டனம் தெரிவித்து உள்ளார். அவர் கூறியிருப்பதாவது:–
இதுபோன்று நடிகைகள் பற்றி அவதூறு பரப்புபவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். இது போன்ற பிள்ளையை பெற்றதற்காக பெற்றோர் நிச்சயம் வருத்தப்படுவார்கள்.
பெண்களை உயர்வாக மதித்து நிறைய ஆண்கள் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள். இது எனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. இவ்வாறு குஷ்பு கூறியுள்ளார்.
சினிமா பின்னணி பாடகி சின்மயியும் நடிகைகள் பற்றி டுவிட்டரில் வெளியாள அவதூறுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.
Comments