சென்னை, ஜூலை 31 -முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாம் மற்றும் வனவிலங்குகள் சரணாலயம் ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது யானைகளுக்கு கரும்பு மற்றும் வாழைப்பழங்கள் கொடுத்தார்.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
பின்னர் யானைகளுக்கு பலா, வாழை மற்றும் கரும்பு போன்ற உணவுகளை அவர் வழங்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து, ஜெயலலிதா முதுமலை வனவிலங்குகள் சரணாலயத்தையும் பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவர் மற்றும் வனத்துறை உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.