சென்னை, ஆக. 21– விநாயகர் சதுர்த்தி விழா வருவதையொட்டி சென்னை கொசப் பேட்டையில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி இந்தியாவில் வேகமாக நடைபெற்று வருகிறது.
விதவிதமான வண்ணங்களில் உருவாக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் மனதை பரவசப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
கொசப்பேட்டை மட்டு மின்றி பல்லாவரம், சேலையூர் உள்பட சென்னை புற நகர் பகுதிகளிலும் சிலை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இங்கு மட்டுமின்றி ஆந்திரா, திருத்தணி பகுதிகளில் இருந்தும் சிலைகள் கொண்டு வரப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
வீதிகளில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளுக்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு கொடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். பதட்டம் நிறைந்த பகுதிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.