கடந்த மே 5 பொதுத்தேர்தலில் மலாய் மக்கள் மற்றும் பூமி புத்ராக்கள் கொடுத்த ஆதரவிற்கு கைமாறாக, தான் இதை செய்வதாகவும் நஜிப் அறிவித்தார்.
“இதை பூமிபுத்ராக்களின் பொருளாதார நிலையை உயர்த்தும் நடவடிக்கைகள் என்று கூறலாம். இதன் மூலம் மலாய் மக்கள் மற்றும் பூமி புத்ராக்கள் தங்களை முன்னேற்றிக் கொள்ளலாம். பொதுத்தேர்தலுக்குப் பின்னர் பூமிபுத்ராக்கள் தங்களின் எதிர்காலம் குறித்து கவலை தெரிவித்து பல்வேறு குறைகளைக் கூறினார். அவர்கள் கூறியது எங்களது காதுகளில் தெளிவாகக் கேட்டது” என்று நஜிப் தெரிவித்தார்.