Home உலகம் உக்ரைனின் கிரிமியாவிலிருந்து ரஷ்யா தனது படைகளை திரும்பப் பெற்றன!

உக்ரைனின் கிரிமியாவிலிருந்து ரஷ்யா தனது படைகளை திரும்பப் பெற்றன!

472
0
SHARE
Ad

article-2571309-1BF82BF800000578-950_634x488 (1)மாஸ்கோ, மார் 5 – உக்ரைன் நாட்டின்  கிரிமியா பகுதிக்குள் ரஷ்ய படைகள் நுழைந்துள்ளன. மேலும் ரஷ்யாவின் கப்பல் படையும் அங்கு முகாமிட்டுள்ளது. இந்நிலையில், ரஷ்யாவின் இந்த நடவடிக்கை உக்ரைன் நாட்டின் இறையானமையை பாதிக்கும் என்று கூறி, படைகளை திரும்பப் பெறும்படி, அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகள் கேட்டுக் கொண்டன.

ஆனால் ரஷ்யா படைகளை திரும்பப் பெறப்போவதில்லை என்ற நிலையில் பிடிவாதமாக இருந்தது.  இந்நிலையில், ரஷ்யாவுடனான தனது ராணுவ ரீதியான உறவுகளை தற்காலிகமாக நிறுத்திக் கொள்வதாக அமெரிக்கா அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், ரஷ்யா, கிரிமியாவிலிருந்து தனது படைகளை திரும்பப் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன,